Friday 27 February 2015

பாடல் - 12

பலன் - மனம் த்யானத்தில் நிலை பெறும்

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர், அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

பொருள்:

அன்னையே, அபிராமியே, புவி - உலகம் ஏழினையும் படைத்தவளே, நான் எப்போதும் நினைத்திருப்பது உன் புகழே. நான் கற்பது உன் நாமத்தினையே. பக்தி செய்வது உன் இரு திருப்பாதங்களையே. இரவும், பகலும் சேர்ந்திருப்பது உன் அடியார்களுடனேயே. இவ்வாறு நான் இருப்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ? - என்று பட்டர் உருகி பாடுகிறார்.

இதிலும் சத்சங்கத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது.

பாடல் (ராகம் - ஜகன் மோகினி, தாளம் - கண்ட சாபு) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment