Saturday 19 December 2015

அபிராமி அந்தாதி - முகப்பு

அபிராமி அந்தாதி பிள்ளையார் காப்பு, 100 பாடல்கள், நூற்பயன் ஆகியவற்றை கேட்பதற்கு இங்கு அழுத்தவும்.

அபிராமி அந்தாதி பிள்ளையார் காப்பு, 100 பாடல்கள், நூற்பயன் ஆகியவற்றின் செய்யுள், பொருள், இசை ஆகியவற்றை படிக்க கீழில் உள்ள எண்களை அழுத்தவும்.

பிள்ளையார் காப்பு
01 02 03 04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
31 32 33 34 35 36 37 38 39 40
41 42 43 44 45 46 47 48 49 50
51 52 53 54 55 56 57 58 59 60
61 62 63 64 65 66 67 68 69 70
71 72 73 74 75 76 77 78 79 80
81 82 83 84 85 86 87 88 89 90
91 92 93 94 95 96 97 98 99 100
நூற்பயன் 

Thursday 17 December 2015

அபிராமி அந்தாதி - பாடல்கள் கேட்க

பிள்ளையார் காப்பு

Check this out on Chirbit

பாடல் - 1

Check this out on Chirbit

பாடல் - 2

Check this out on Chirbit

பாடல் - 3

Check this out on Chirbit

பாடல் - 4

Check this out on Chirbit

பாடல் - 5

Check this out on Chirbit

பாடல் - 6

Check this out on Chirbit

பாடல் - 7

Check this out on Chirbit

பாடல் - 8

Check this out on Chirbit

பாடல் - 9

Check this out on Chirbit

பாடல் - 10

Check this out on Chirbit

பாடல் - 11

Check this out on Chirbit

பாடல் - 12

Check this out on Chirbit

பாடல் - 13

Check this out on Chirbit

பாடல் - 14

Check this out on Chirbit

பாடல் - 15

Check this out on Chirbit

பாடல் - 16

Check this out on Chirbit

பாடல் - 17

Check this out on Chirbit

பாடல் - 18

Check this out on Chirbit

பாடல் - 19

Check this out on Chirbit

பாடல் - 20

Check this out on Chirbit

பாடல் - 21

Check this out on Chirbit

பாடல் - 22

Check this out on Chirbit

பாடல் - 23

Check this out on Chirbit

பாடல் - 24

Check this out on Chirbit

பாடல் - 25

Check this out on Chirbit

பாடல் - 26

Check this out on Chirbit

பாடல் - 27

Check this out on Chirbit

பாடல் - 28

Check this out on Chirbit

பாடல் - 29

Check this out on Chirbit

பாடல் - 30

Check this out on Chirbit

பாடல் - 31

Check this out on Chirbit

பாடல் - 32

Check this out on Chirbit

பாடல் - 33

Check this out on Chirbit

பாடல் - 34

Check this out on Chirbit

பாடல் - 35

Check this out on Chirbit

பாடல் - 36

Check this out on Chirbit

பாடல் - 37

Check this out on Chirbit

பாடல் - 38

Check this out on Chirbit

பாடல் - 39

Check this out on Chirbit

பாடல் - 40

Check this out on Chirbit

பாடல் - 41

Check this out on Chirbit

பாடல் - 42

Check this out on Chirbit

பாடல் - 43

Check this out on Chirbit

பாடல் - 44

Check this out on Chirbit

பாடல் - 45

Check this out on Chirbit

பாடல் - 46

Check this out on Chirbit

பாடல் - 47

Check this out on Chirbit

பாடல் - 48

Check this out on Chirbit

பாடல் - 49

Check this out on Chirbit

பாடல் - 50

Check this out on Chirbit

பாடல் - 51

Check this out on Chirbit

பாடல் - 52

Check this out on Chirbit

பாடல் - 53

Check this out on Chirbit

பாடல் - 54

Check this out on Chirbit

பாடல் - 55

Check this out on Chirbit

பாடல் - 56

Check this out on Chirbit

பாடல் - 57

Check this out on Chirbit

பாடல் - 58

Check this out on Chirbit

பாடல் - 59

Check this out on Chirbit

பாடல் - 60

Check this out on Chirbit

பாடல் - 61

Check this out on Chirbit

பாடல் - 62

Check this out on Chirbit

பாடல் - 63

Check this out on Chirbit

பாடல் - 64

Check this out on Chirbit

பாடல் - 65

Check this out on Chirbit

பாடல் - 66

Check this out on Chirbit

பாடல் - 67

Check this out on Chirbit

பாடல் - 68

Check this out on Chirbit

பாடல் - 69

Check this out on Chirbit

பாடல் - 70

Check this out on Chirbit

பாடல் - 71

Check this out on Chirbit

பாடல் - 72

Check this out on Chirbit

பாடல் - 73

Check this out on Chirbit

பாடல் - 74

Check this out on Chirbit

பாடல் - 75

Check this out on Chirbit

பாடல் - 76

Check this out on Chirbit

பாடல் - 77

Check this out on Chirbit

பாடல் - 78

Check this out on Chirbit

பாடல் - 79

Check this out on Chirbit

பாடல் - 80

Check this out on Chirbit

பாடல் - 81

Check this out on Chirbit

பாடல் - 82

Check this out on Chirbit

பாடல் - 83

Check this out on Chirbit

பாடல் - 84

Check this out on Chirbit

பாடல் - 85

Check this out on Chirbit

பாடல் - 86

Check this out on Chirbit

பாடல் - 87

Check this out on Chirbit

பாடல் - 88

Check this out on Chirbit

பாடல் - 89

Check this out on Chirbit

பாடல் - 90

Check this out on Chirbit

பாடல் - 91

Check this out on Chirbit

பாடல் - 92

Check this out on Chirbit

பாடல் - 93

Check this out on Chirbit

பாடல் - 94

Check this out on Chirbit

பாடல் - 95

Check this out on Chirbit

பாடல் - 96

Check this out on Chirbit

பாடல் - 97

Check this out on Chirbit

பாடல் - 98

Check this out on Chirbit

பாடல் - 99

Check this out on Chirbit

பாடல் - 100

Check this out on Chirbit

நூற்பயன்

Check this out on Chirbit

Monday 14 December 2015

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

பொருள்:

இந்த பாடலில், அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து, அன்னையை தொழுவார்க்கு கிடைக்கும் பலனை அபிராமி பட்டர் கூறுகிறார்.

அன்னை அபிராம வல்லி, இந்த அண்டத்தை பெற்றவள். ஸ்ரீ மாதா என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் முதல் நாமம், அன்னையே என்று துவங்குகிறது.

மாதுளம் பூ போல், இளஞ்சிவப்பு நிறத்தவள். சிந்தூராருண விக்ரஹாம் என்று லலிதா சஹஸ்ரநாமம் த்யானம் தொடங்குகிறது. சிந்தூரம் போல், சிவந்த மேனி உடையவள் அன்னை. அருணா என்றும் ஒரு பெயர் அவளுக்கு. மேலும் உத்யத் பானு சஹாஸ்ராபா என்றும் ஒரு நாமம். 1000 உதய சூரியர்களைப்போல் சிவந்த மேனி உடையவள் என்று இதற்கு பொருள்.

இந்த உலகை அருளாட்சி புரிந்து காப்பவள். ஸ்ரீ மகா ராக்ஞீ, ஸ்ரீ மத் சிம்ஹாசனேஸ்வரி, என்று அன்னையின் பரிபாலனத்தை விளக்கும் இரு நாமங்கள், சஹஸ்ரநாமத்தில் இரண்டாவது, மூன்றாவதாக வருபவை.

 ஐந்து மலர்களால் ஆன அம்பு, பாசம், அங்குசம், கரும்பு வில் ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஒருங்கே ஏந்தியவள். ராகஸ்வரூப பாஷாட்யா, க்ரோதாங்காராங்குஷோஜ்வலா, மனோ ரூபேக்ஷு கோதண்டா, பஞ்ச தன்மாத்ர சாயகா என்று அடுத்து வரும் நாமங்கள் இந்த வரிகளை விளக்குபவை.

இத்தகு பெருமை வாய்ந்த முக்கண்களை உடையவளை (த்ரிநயனாம் என்று சஹஸ்ரநாமம் அன்னையை வர்ணிக்கிறது) தொழுவார்க்கு என்றும் நன்மையே. தீமை அணுகவே அணுகாது.

எல்லோரும் இன்புற்றிருக்க அன்னை அபிராமியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாடல் (ராகம் - மத்யமாவதி, தாளம் -- விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Sunday 13 December 2015

பாடல் - 100

பலன்: அன்பால் இணைவோம்

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திரு நெடுந்தோளும், கருப்பு வில்லும்
விழையைப் பொரு திறல் வேரியம் பாணமும், வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

பொருள்:
1. குழை - கூந்தல். கூந்தலை தழுவும் கொன்றை மலரால் கட்டப்பட்ட மாலையானது அன்னையின் மார்பின் மீதும் தழுவுகிறது. அதனால், அன்னையின் திருமார்பகங்களில், அந்த மலரின் வாசம் நிறைந்துள்ளது.

2. அன்னையின் தோள்கள், நெடுந்தோள்கள். தோள்கொடுப்பது என்றால், ஆறுதல் தருதல், அரவணைத்தல் ஆகும். அம்பாள் நம்மை அரவணைப்பவள். நமக்கு ஆறுதல் தருபவள். அதற்காகவே அன்னைக்கு பெரிய நெடுந்தோள்.

3. அன்னை தன் ஒரு கையில் அழகிய கரும்பு வில்லும், மற்றொரு கையில் 5 மலர்களாலான அம்புகளையும் வைதுள்ளாள்.

4. அன்னை, தன் அழகிய வெண் பற்களை காண்பித்து, குறுநகை புரிகிறாள். சுத்த வித்யாங்குரா கார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அன்னையின் பற்கள் தூய அறிவு போல் வெண்மையானது, என்று வர்ணிக்கிறது.

5. மான் போன்ற மருண்ட கண்கள் உடையவள். மான் எப்போதும் எச்சரிக்கையாகவே பார்த்துக்கொண்டிருக்கும். அன்னையும், தன் குழந்தைகளாம் நம்மை காக்கும் பொருட்டு, அது போல இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருப்பாள்.

இதுபோன்ற அழகியவை நிறைந்த அன்னையின் திருமேனியே என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அந்த திருமேனியை என்றும் வழிபடுவேன்.

இவ்வாறு பட்டர் பாடுகிறார். நாமும் அவர் வழி நடப்போம்.

பாடல் (ராகம்: லலிதா, தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

பாடல் - 99

பலன்: திருமணம் இனிதே நடந்தேறும்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாச்சலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்:

கயிலயம் பதியாம் சிவபெருமானுக்கு, இமவான் அன்று தன் மகளை மணமுடித்து வைத்தான். கடம்ப வனத்தில் இருக்கும் குயில் போன்றவள் நம் அன்னை. அழகிய மயில் போல இமயத்தில் இருப்பவள். உதிக்கும் சூரியனாய், வன வெளியில் திகழ்பவள். அழகிய தாமரையில் வீற்றிருக்கும், அன்னப்பறவையினை ஒத்தவள்.

கடம்பவனம் - மதுரை. மதுரையில் மீனாக்ஷி, குயில் போன்றவள். சங்கீதத்திற்கு அதிபதி. குயில் அழகாக கூவும். இனிய குரல் உடையது. அதனால் மதுரையில் அன்னை குயிலாக வீற்றிருக்கிறாள் என்று சொல்வதுண்டு.

மயில் நாட்டியத்திற்கு பெயர் பெற்றது. இமய மலையில் நடன சபேசனுடன், நடனம் புரியும் மயிலாக அன்னை இருக்கிறாள்.

விசும்பு - ஆகாயம். சிதம்பரம் ஆகாய ஸ்தலம். பொன்னம்பலம் என்று பெயர் அவ்வூரிற்கு. அங்கு ஞான ஒளி வீசும் சூரியனாக சிவகாமசுந்தரி இருக்கிறாள்.

கமலத்தில் - கமலாலயம் - திருவாரூரில், கமலாம்பாள் அன்னம் வடிவில் வீற்றிருக்கிறாள்.

பாடல் (ராகம்: திலங், தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Friday 11 December 2015

பாடல் - 98

பலன்: வஞ்சகரின் செயலிலிருந்து விடுபடுவோம்

தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலைவந்த ஆறும், கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மாடப் பூங்குயிலே

பொருள்:

அன்னை அபிராமி, மாடத்தில் வீற்றிருக்கும் பூங்குயில். அவள் உண்மை நிறைந்த நெஞ்சில் இருப்பாள். பொய்கள் நிரம்பிய வஞ்சகரின் நெஞ்சில் ஒருகாலும் நிறைய மாட்டாள். அந்த வஞ்சகம் நிறைந்த இடத்தில் புகுதல் அவள் அறியாததொன்று.

இப்படிப்பட்ட சத்யஸ்வரூபிணியாம் நம் அன்னயின் பாத கமலங்களை தன் தலையில் சிவபெருமான் (சங்கரர்) சூடியுள்ளார். அதன் மகிமையினால், தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை, எளிதில் கையில் ஏந்தினார். பகீரதனின் முயற்சியால், ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையினையும் தன் தலையில் சூடிக்கொண்டார். நீர், நெருப்பு இவ்விரண்டின் தாக்கமும் அன்னையின் அருளால், மறைந்து விட்டன.

பாடல் (ராகம்: துர்கா , தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

Thursday 10 December 2015

பாடல் - 97

பலன்: அவரவர் துறையில் சிறந்து விளங்குவோம்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தம் கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதிய முனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர், போற்றுவர் தையலையே

பொருள்:

இப்பாடலில், என்றும் இளையவள், (தையல் - சிறிய வடிவம் கொண்டவள்), பாலா என்ற நாமம் கொண்டவளான அன்னை அபிராமியை, போற்றித் துதித்து, புண்ணியம் பெற்று, சாதனைகள் பல செய்து பெருமை பெற்றவர்கள் பலர் உள்ளனர் என்று பட்டர் பெருமைப்பட பாடுகிறார்/. எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிடுவது இவர்களை:

1. ஆதித்தன் - சூர்யன்
2. அம்புலி - நிலா, சந்திரன்
3. அங்கி - அக்னி தேவன்
4. குபேரன் - செல்வத்திற்கு அதிபதி
5. அமரர் தம் கோன் - தேவர்களின் தலைவன், இந்திரன்
6. போதிற் பிரமன் - தாமரையில் உதித்த பிரம்மா
7. முராரி - முரன் என்ற அசுரனை வென்ற திருமால்
8. புராரி - அசுரர்களின் திரிபுரத்தை எரித்த சிவ பெருமான்
9. பொதிய முனி - பொதிகை மலையில் வசிக்கும் அகஸ்தியர்
10. காதிப் பொருபடைக் கந்தன் - அசுரர்களை எதிர்த்து பெரும் போர் புரிந்த முருகப்பெருமான்
11. கணபதி - விநாயகர்
12. காமன் - சிவனால் எரிக்கப்பட்டு, அன்னையின் அருளால், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் மன்மதன்

இந்த 12 பேர்களும், மிக முக்கியமான ஸ்ரீ வித்யா உபாசகர்கள் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

இவர்களை போல் நாமும் அன்னையை வணங்கி, பல நன்மைகளைப் பெறுவோம்.

பாடல் (ராகம்: செஞ்சுருட்டி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Tuesday 8 December 2015

பாடல் - 96

பலன்: சகல கலைகளிலும் தேர்ச்சி பெறுவோம்

கோமள வல்லியை, அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இல்லாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே

பொருள்:

1. கோமள வல்லி - அழகிய பெண்
2. அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை - அழகிய மென்மையான தாமரையினை இருப்பிடமாகக் கொண்டு உறையும் யாமள (இளமை ததும்பும்)வல்லி. தாமரை - கமலம். கோயில் - ஆலயம். கமலாலயம் - தாமரைக்கோயில். திருவாரூர் க்ஷேத்ரத்தில், தாமரையினை கோயிலாக அன்னை  அபிராமி,கமலாம்பாளாக அருள் புரிகிறாள்.
3. ஏதம் இல்லாள் - குற்றமற்றவள்
4. எழுதரிய சாமள மேனி - எழுத்தால் வர்ணிக்க முடியாத அழகிய கருநிற மேனி உடையவள். (ஷ்யாமே, ஷ்யாமளே என்று பெரியோர்கள் அம்பாளை அழைப்பார்கள்)
5. சகல கலா மயில் - அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவள், மயில் போன்ற அழகு நிறைந்தவள்

இத்தகு பெருமை வாய்ந்த அன்னையை, தம்மால் முடிந்த அளவிற்கு வணங்குபவர்கள், நிச்சியம் ஏழு உலகிற்கும் அதிபர்கள் ஆவார்கள்.

பாடல் (ராகம்: பிருந்தாவன சாரங்கா, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit