Tuesday 8 December 2015

பாடல் - 96

பலன்: சகல கலைகளிலும் தேர்ச்சி பெறுவோம்

கோமள வல்லியை, அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இல்லாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே

பொருள்:

1. கோமள வல்லி - அழகிய பெண்
2. அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை - அழகிய மென்மையான தாமரையினை இருப்பிடமாகக் கொண்டு உறையும் யாமள (இளமை ததும்பும்)வல்லி. தாமரை - கமலம். கோயில் - ஆலயம். கமலாலயம் - தாமரைக்கோயில். திருவாரூர் க்ஷேத்ரத்தில், தாமரையினை கோயிலாக அன்னை  அபிராமி,கமலாம்பாளாக அருள் புரிகிறாள்.
3. ஏதம் இல்லாள் - குற்றமற்றவள்
4. எழுதரிய சாமள மேனி - எழுத்தால் வர்ணிக்க முடியாத அழகிய கருநிற மேனி உடையவள். (ஷ்யாமே, ஷ்யாமளே என்று பெரியோர்கள் அம்பாளை அழைப்பார்கள்)
5. சகல கலா மயில் - அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவள், மயில் போன்ற அழகு நிறைந்தவள்

இத்தகு பெருமை வாய்ந்த அன்னையை, தம்மால் முடிந்த அளவிற்கு வணங்குபவர்கள், நிச்சியம் ஏழு உலகிற்கும் அதிபர்கள் ஆவார்கள்.

பாடல் (ராகம்: பிருந்தாவன சாரங்கா, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment